Wednesday, October 27, 2010

இன்னமும் அவள்

உதிர்ந்து போன
மலர்கள்
கடைசியாக வீசிய மணம்..

நேற்றைய
மழையில்
இன்று வரை இருக்கும்
மண் வாசம் ...

மறையும்
சூரியனின்
மாலை வானத்து ஒளி...

நகரத்தின் அடர்ந்த
மனிதத் தலைகளை
அடுத்து இருக்கும்
என் தனி வீடு...

கடலலை
நடுவில்
முதலில்
சுவைத்த மழைத் துளி....

அம்மாவின்
மார்பில் கடைசியாக
சாய்ந்த தருணம்...

என்றோ
என் முகம்
வருடிச் சென்ற
குழந்தையின் விரல்கள்...

எனக்கான
என்
தந்தையின்
வாழ்க்கை..

இவை
அனைத்தையும்
விட
இன்னமும்
கணத்துக் கொண்டே
இருக்கிறது
அவள் நினைவுகள்
இதயத்தில்...

Tuesday, October 26, 2010

வளையல்கள்

எங்கிருந்து கிடைக்கிறது 
இத்தனை வண்ணங்களில் 
வளையல்கள்...
உனக்கு மட்டும் ...
எப்பொழுது அவை 
உடையும் ...
காத்திருக்கிறது 
என் செல்லப்பெட்டி ....

Sunday, October 17, 2010

" சுடிதார் சூனியக்காரி "




        பித்து பிடித்தே நடமாடுகிறேன் ...
            அம்மா சொன்னால்..
                  "காத்தோ..,கருப்போ ..,
                     யாருக்கு தெரியும் ?"
        எனக்கு தெரியும் ,
             அவள் ,
               " சுடிதார்
சூனியக்காரி "

வலைப்பதிவு உலக நண்பர்களுக்கு என் அறிமுகம்

   என் கவிதை இதுவரை நான் அறிந்தோர் வரை பெற்ற விமர்சனங்களையும் , என் கவிதை சாரல்களையும் உங்களோடு பகிர்ந்து கொள்ள இதனை வாய்ப்பாக கருதுகிறேன் .