Wednesday, October 27, 2010

இன்னமும் அவள்

உதிர்ந்து போன
மலர்கள்
கடைசியாக வீசிய மணம்..

நேற்றைய
மழையில்
இன்று வரை இருக்கும்
மண் வாசம் ...

மறையும்
சூரியனின்
மாலை வானத்து ஒளி...

நகரத்தின் அடர்ந்த
மனிதத் தலைகளை
அடுத்து இருக்கும்
என் தனி வீடு...

கடலலை
நடுவில்
முதலில்
சுவைத்த மழைத் துளி....

அம்மாவின்
மார்பில் கடைசியாக
சாய்ந்த தருணம்...

என்றோ
என் முகம்
வருடிச் சென்ற
குழந்தையின் விரல்கள்...

எனக்கான
என்
தந்தையின்
வாழ்க்கை..

இவை
அனைத்தையும்
விட
இன்னமும்
கணத்துக் கொண்டே
இருக்கிறது
அவள் நினைவுகள்
இதயத்தில்...

No comments:

Post a Comment